முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் டுவீட்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழ் மொழியில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். 

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய இந்த குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பதிவில்,  எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது.  மேலும் பயிற்று மொழியை தெரிவு செய்து கொள்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை. நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து