முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி குறித்து பேச தமிழக பா.ஜ.க. எங்களுக்கு கட்டளையிட முடியாது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர். கப்பல் ஓட்டுபவர்களெல்லாம் வ.உ.சியாக முடியாது என்று கூறினார். 

தொடர்ந்து நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகி விட முடியாது. நடிகர் விஜய்யால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியாது என்று பதில் அளித்தார்.

மேலும் அரசின் நிர்வாக காரணங்களுக்காவே இராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து