எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை ஆணையாளர் விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
முதல்வர் எடப்பாடியார் பல்வேறு சீரிய திட்டங்களை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த அம்மா மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் வாழும் மக்களுக்கு, ரூ.1020 கோடி செலவில், முல்லை பெரியார் அணையிலிருந்து நேரடியாக பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து, சுமார் 60 ஆண்டுகள் குடிநீர் பிரச்சனையே ஏற்படாவண்ணம் வசதி செய்து தர பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அனைத்து வார்டுகளுக்கும் சாலை வசதி, டுநுனு மின்விளக்கு, சுகாதாரம், தூய்மை பணிகள் மற்றும் பல ஆயிரம் கோடி செலவில் உயர்மட்ட பாலங்கள் ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசால் விலையில்லா மடிக்கணினி, இடைநிற்றல் உதவித்தொகை,16 வகையான உபகரணங்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
12-ம் வகுப்பில் மாணவ, மாணவிகள் அதிக தேர்ச்சி பெற சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையை உருவாக்கி, மருத்துவ மற்றும் பொறியியல் படிப்பு போன்ற உயர்தர படிப்புகள் சேர்வதற்கு ஏதுவாகவும், போட்டி தேர்வுகள் எதிர் கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, வேண்டிய அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, அதில் மதுரை மாநகராட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மத்திய அரசு மாநில அரசு பங்களிப்புடன் பல்வேறு வளர்ச்சி பணிகள், வேறு எந்த அரசும் குறிப்பாக தி.மு.க. அரசு இதுவரை அக்கரை எடுத்துக்கொள்ளாத நிலையில், சாமானிய மக்களின் முதல்வர் எடப்பாடியாரின் அரசு மதுரை மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பின்வரும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாட்டுத்தாவணி பழச்சந்தையினை மாற்றியமைக்கும் பணி ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தினை மேம்படுத்தும் பணி ரூ.162 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது.
வரும் மார்ச் 2021 - க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புராதன சின்னங்களை புனரமைக்கும் பணி ரூ.38 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. வரும் டிசம்பர் 2020க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்லடுக்கு வாகன நிறுத்தம் கட்டுமானப் பணி ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 2020 - க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்தும் பணி ரூ.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. வரும் மார்ச் 2021க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்படுள்ளது. நான்கு மாசி வீதிகளில் சிறப்பு சாலை அமைக்கும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது.
வரும் மார்ச் 2021- க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்படுள்ளது. தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் அமைக்கும் பணி ரூ.46 கோடியில் நடைபெற்று வருகின்றது.
வரும் மார்ச் 2021க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைகை வடகரை புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைப்பு ஏற்படுத்தும் பணி ரூ.291 கோடி மதிப்பீட்டில், வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
வரும் மே2022 - க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீரான குடிநீர் வழங்கும் பணி ரூ.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. வரும் பிப்ரவரி 2021க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பல்லடுக்கு வாகன நிறுத்தமானது. மீனாட்சியம்மன் கோவில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய சென்ட்ரல் மார்கெட் பகுதியில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பல்லடுக்கு வாகன (110 எண்ணம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1401 எண்ணம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம் வகையில்) நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம், புராதன சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையம் ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணி வரும் அக்டோபர் 2020க்குள் பணி முடிக்கபட்டு வாகனங்கள் நிறுத்துவதற்கான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இப்பணிகள் தரத்துடன் உரிய காலத்தில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் பி.எஸ்.மணியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட்தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா, செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், சுரேஷ்குமார், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.