முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வரும் 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 11-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. அதனால் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 

இதுவரை கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் 11-ம் தேதி செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். 

சென்னையை அடுத்து பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களுள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு 7,528 பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து