முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்: மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையே பின்பற்றபடும் என மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3-வது மொழி எது என்பதை மாநில அரசே முடிவு செய்யும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. 

மக்களவையில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதில், புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், மூன்றாவது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து