எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தென்னிந்திய இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் கொடி கட்டி பறந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று நம்மிடையே இல்லை. இருந்தாலும் அவரது இனிமையான வசீகரிக்கும் குரல் மூலம் அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றால் அது மிகையாகாது. பொதுவாக இசை உலகில் கர்நாடக சங்கீதம் பயின்றவர்களே வெற்றிக் கொடி நாட்டிய வரலாறு உண்டு. ஆனால் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாமல் இசை உலகை ஆண்டவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். கிட்டத்தட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மகத்தான சாதனை புரிந்தவர் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இவர் பாடாத மொழிகளே இல்லை. திரை இசை திலகம் கே.வி. மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா மற்றும் சங்கர் கணேஷ், தேவா என பல்வேறு இசை அமைப்பாளர்களின் இசைக்கு மெருகூட்டி பாடியவர் எஸ்.பி.பி. அது மட்டுமல்ல, பாடலில் சிரிப்பை புகுத்தி ஒரு புதிய சாதனையை படைத்தவர் எஸ்.பி.பி. அதாவது சிரித்துக் கொண்டே பாடுவதில் இவர் அசகாய சூரர். அதே போல் சோகப் பாடல்களை பாடியும் ரசிகர்களின் இதயத்தை வருடியவர் எஸ்.பி.பி. கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகளை 6 முறை பெற்றவர் இவர். ஆந்திர அரசின் நந்தி விருதை 25 முறை பெற்றுள்ளார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்று வரை பாடியவர் எஸ்.பி.பி. கிட்டத்தட்ட 4 தலைமுறை நடிகர்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். தமிழில் இவர் சாந்தி நிலையம் படத்தில் நடிகர் ஜெமினி கணேசனுக்காக இயற்கை எனும் இளைய கன்னி என்ற அற்புதமான பாடலை இசைக்குயில் சுசீலாவுடன் சேர்ந்து பாடினார். அந்த பாடல் அப்போது பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் அதே சுசீலாவுடன் இணைந்து ஆயிரம் நிலவே வா என்ற பாடலை பாடி எம்.ஜி.ஆர். ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார். நேற்று இன்று நாளை படத்தில் பாடும் போது நான் தென்றல் காற்று, பருவ மங்கையோ தென்னங்கீற்று என்ற பாடலை மிக அற்புதமாக பாடியிருப்பார் எஸ்.பி.பி. அதே போல் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் என்று எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய பாடல் இன்று கேட்டாலும் நமது உள்ளத்தை தொடும். அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக சுமதி என் சுந்தரி படத்தில் பொட்டு வைத்த முகமோ, கட்டி வைத்த குழலோ என்ற பாடலை மிக ரம்மியமாக பாடிய சிவாஜி ரசிகர்களின் உள்ளங்களை கட்டிப் போட்டவர் எஸ்.பி.பி. கவரிமான் படத்தில் பூப்போலே உன் புன்னகையில் என்ற பாடலையும், கவுரவம் படத்தில் யமுனா நதி இங்கே, ராதை முகம் எங்கே என்ற பாடலையும் மிக அற்புதமாக பாடியிருப்பார் எஸ்.பி.பி. அது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமலுக்காகவும் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதவை. ரஜினிக்காக தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் என்ற பாடலை பாடி ரசிகர்களை அசத்தியவர் எஸ்.பி.பி. தில்லுமுல்லு படத்தில் ராகங்கள் பதினாறு என்ற பாடலையும் ரஜினிக்காக பாடினார். கமலுக்காக இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்ற பாடலையும், நீயா படத்தில் நான் கட்டில் மேலே கண்டேன் என்ற பாடலையும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடலையும் பாடி கமல் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் எஸ்.பி.பி. கடவுள் அமைத்து வைத்த மேடை இசைக்கும் கல்யாண மாலை என்று கமலுக்காக இவர் பாடிய பாடல் காலத்தால் அழியாத பாடலாகும்.
புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்காக சின்ன மணிக்குயிலே உள்ளிட்ட பல பாடல்களை பாடி அவரது ரசிகர்களையும் தனது இசை என்ற வட்டத்துக்குள்ளே கொண்டு வந்தவர் எஸ்.பி.பி. 1980-களில் பல வெற்றிப் படங்களை தந்தவர் மைக் மோகன். இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் இளைய நிலா பொழிகிறதே என்ற ஒரு பாடல் வரும்.
அந்த பாடலில் தனது மென்மையான இசையை பொழிந்தவர் எஸ்.பி.பி. உதயகீதம் என்ற படத்தில் உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் என்று கிளைமேக்ஸ் காட்சியில் எஸ்.பி.பி.யின் ஒரு பாடல் வரும். அந்த பாடலில் உண்மையாகவே தனது குரல் மூலம் அழுதிருப்பார் எஸ்.பி.பி. அந்த பாடலை கேட்டு கண்கலங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். நடிகர் மைக் மோகனின் வெற்றிக்கு எஸ்.பி.பி.யின் பாடல்களே காரணம் என்று சொன்னாலும் அதில் தவறு இருக்க முடியாது.
சங்கீதத்தை முறையாக படிக்காதவர் எஸ்.பி.பி. ஆனால் பாரதிராஜாவின் காதல் ஓவியம் என்ற படத்தில் சங்கீத ஜாதி முல்லை காணவில்லை என்ற பாடலை ஸ்ருதி பிசகாமல் உரத்த குரலில் பாடி ஜால வித்தைகளை காட்டியிருப்பார் எஸ்.பி.பி. நவரச நாயகன் கார்த்திக்கிற்காக நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று என்ற பாடலையும் நடிகர் பிரபுவுக்காக என்னவென்று சொல்வதம்மா, குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம் போன்ற பாடல்களையும் பாடி இசை உலகில் கோலோச்சியவர் எஸ்.பி.பி. அது மட்டுமல்ல, நடிகர் சிவகுமாருக்காக இவர் பாடிய பாடல்களும் உலகப் புகழ் பெற்றவை. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி, காதல் விளையாட கட்டில் எது கண்ணே போன்ற பாடல்களும், நடிகர் முத்துராமனுக்காக சம்சாரம் என்பது வீணை, சந்தோஷம் என்பது ராகம் என்ற பாடலையும் பாடி ரசிகர்களின் இதயத்தில் அசைக்க முடியாத இடத்தை பெற்றார் எஸ்.பி.பி.
டி. ராஜேந்தரின் இசையில் வெளிவந்த படத்தில் இவர் பாடிய இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம் என்ற பாடல் ரசிகர்களின் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி, ஆஸ்கார் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த படத்தில் காதல் ரோஜாவே என்று இவர் பாடிய பாடல் ரசிகர்களின் உள்ளத்தை இன்றும் நெருடக்கூடிய ஒரு அற்புதமான பாடல்.
அது மட்டுமா, இன்றைய நாயகர்கள் விஜய், அஜித் போன்றவர்களுக்கும் இவர் பாடத் தவறவில்லை. அஜித்துக்காக அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலையும், விஜய்க்காக சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் என்ற பாடலையும் பாடி அவர்களது ரசிகர்களையும் ஆட்கொண்டவர் எஸ்.பி.பி. எல்லாவற்றுக்கும் மேலாக கேளடி கண்மணி படத்தில் மூச்சு விடாமல் பாடி ரசிகர்களை கிறங்கடித்தவர் எஸ்.பி.பி. மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்று ராதிகாவுக்காக மூச்சுவிடாமல் பாடியிருப்பார் எஸ்.பி.பி. அந்த பாடலை பாடிய எஸ்.பி.பி.யின் மூச்சு தற்போது நின்று போனது ரசிகர்களின் இதயத்தையும் நிறுத்தி விட்டது.
இப்படி 50 ஆண்டு காலம் இசை உலகில் கோலோச்சியவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். மக்கள் திலகம் முதல் இன்றைய இளைய தளபதி வரை நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடிய பெருமை உண்டு என்றால் அது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தையே சாரும். அத்தோடு விட்டாரா, பக்தி பாடல்களிலும் இமயம் தொட்டவர் எஸ்.பி.பி. நமச்சிவாய, நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்று பக்தி ரசம் சொட்ட சொட்ட இவர் பாடிய பாடல் இன்றும் ஆலயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவர் மறைந்தாலும் அவரது பாடல் இசை இன்னும் பல நூற்றாண்டுகள் உலகம் முழுவதும் ஒலித்து அவரது திறமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்றால் அது மிகையாகாது.
உதயகீதம் படத்தில் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் என்று ஒரு பாடல் வரும். அந்த பாடலின் இடையில் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று பாடியிருப்பார் எஸ்.பி.பி. அதே போல் இன்று அவர் மறைந்திருந்தாலும் என்றும் இசையாய் அவர் மலர்ந்திருப்பார் என்பதே உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் : ரயில்கள் விவரம் வெளியீடு
24 Dec 2025சென்னை, வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கதத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரங்ளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Dec 2025சென்னை, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.


