முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்: ஆய்வில் தகவல்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.  அதுமட்டுமல்ல, அவர்களுடைய மனநிலையில் கூட ஏராளமான மாற்றங்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் கனவு காண்பதில் கூட அசாதாரண நிலை நிலவுகிறது. இது சம்பந்தமாக அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் சங்கம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 

கொரோனா பாதித்த 2,888 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோசமான கனவுகள் அதிகமாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சொந்தங்களால் கை விடப்படுதல், வேலையிழப்பு, பண இழப்பு மற்றும் பயங்கர பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற கனவுகள் மிக அதிகமாக வருவதும் தெரிய வந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து