முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமாவளவனை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க. - வி.சி.க. இடையே கைகலப்பு

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் திருமாவளவனை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்ப முயன்ற பா.ஜ.க.வினருக்கும்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 

சமீபத்தில் மனுதர்ம நூலில் உள்ள கருத்துக்களை குறிப்பிட்டு பெண்கள் பற்றி திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி கந்தசாமியூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவரை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்ப முயன்றனர். 

இதனை அறிந்து வி.சி.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வாகனங்கள் மீது கற்கள் மற்றும் செருப்பை வீசி தாக்கிக் கொண்டனர்.   

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலை விளக்கி திருமாவளவனை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பா.ஜ.க.வை சேர்ந்த 15 பேரையும் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து