முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியட்நாமை சூறையாடிய புயல் : 136 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஹனோய் : வியட்நாமில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வியட்நாமில் மோலேவே என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த பலத்த மழையால் பல மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

புயல், மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குயங்னம் மாகாணம் தற்போது நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக்கூரைகள் சேதமடைந்திருக்கிறது. 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய புயல்களில் மிக மோசமான புயல் இது என கூறப்படுகின்றது. தற்போது உயிரிழந்தவர்களில் 12 பேர் மீனவர்கள் என்றும் மேலும் 14 மீனவர்கள் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து