முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

சென்னையில் 13 இடங்களில்தான் மழைநீர் தேங்கியுள்ளது. 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன. தி.மு.க. ஆட்சியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து