எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 மாத கால சுற்றுப்பயணமாக துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. துறைமுக நகரான சிட்னியை சென்றடைந்த இந்திய வீரர்கள் சிட்னி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சிட்னி ஒலிம்பிக் பார்க் பகுதியில் உள்ள புல்மேன் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.
அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறையை முடித்ததும் சிட்னி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள். தனிமைப்படுத்துதல் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடியவர்கள். அதே சமயம் டெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா தாயகம் திரும்பி ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் கொரோனா தடுப்பு தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டி உள்ளதால் கோலி அதன் பிறகு கடைசி கட்ட டெஸ்டுக்கான அணியுடன் இணைய வாய்ப்பில்லை.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் மூன்று ஒரு நாள் போட்டிகள் (நவ.27, நவ.29, டிச.2) மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் (டிச.4, டிச.6, டிச.8) விளையாடுகிறது. குறுகிய வடிவிலான போட்டிகள் நிறைவடைந்ததும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
22 வயதான வில் புகோவ்ஸ்கி உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ரன்மழை பொழிந்து வருகிறார். ஷெப்பீல்டு கோப்பைக்கான 4 நாள் கிரிக்கெட்டில் விக்டோரியா அணிக்காக தொடக்க வீரராக இறங்கி அடுத்தடுத்த ஆட்டங்களில் இரட்டை சதம் (255 ரன், 202 ரன்) விளாசினார். இந்த போட்டியில் 1997-98-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இதே போல் 21 வயதான கேமரூன் கிரீன் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்தும் வீசக்கூடியவர். ‘ஆஸ்திரேலியாவின் அடுத்த ரிக்கிபாண்டிங்’ என்று வர்ணிக்கப்படும் கிரீன் சமீபத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் கண்டு 197 ரன்கள் குவித்து இருந்தார். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு அவர் ஏற்கனவே தேர்வாகி இருப்பது கவனிக்கத்தக்கது.
உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தடுமாறினாலும் ஜோ பர்ன்ஸ் (5 இன்னிங்சில் 57 ரன்) இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆனால் டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களம் காணும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.
அதே சமயம் ஏற்கனவே ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சீன் அப்போட், மைக்கேல் நேசர், சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் டிரெவேர் ஹான்ஸ் கூறுகையில், ‘ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஏ அணி தேர்வுக்கான போட்டியில் நிறைய இளம் வீரர்கள் அணிவகுத்து நிற்பது நல்ல அறிகுறியாகும். இதில் புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். ஒதுக்க முடியாத அளவுக்கு அவர்களின் ஆட்டத்திறன் அபாரமாக இருக்கிறது. அவர்களை போன்ற இளம் வீரர்களை வலுவான அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சேர்த்து இருப்பது திருப்தி அளிக்கிறது’ என்றார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:- டிம் பெய்ன் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், ஜோ பர்ன்ஸ், புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஜேம்ஸ் பேட்டின்சன், மைக்கேல் நேசர், சீன் அப்போட், நாதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன்.
இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஏ அணியிலும் டிம் பெய்ன், புகோவ்ஸ்கி, கேமரூன் கிரீன், சீன் அப்போட், ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட், பேட்டின்சன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.