எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : நிட்டோ ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஆண்டு இறுதி உலக தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்கள் மோதும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடர் லண்டனில் நடந்தது. டோக்கியோ 1970, லண்டன் 2020 என 2 பிரிவுகளாக நடந்த லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.
முதல் அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்திய டொமினிக் தீம் (3வது ரேங்க்) பைனலுக்கு முன்னேறினார். 2வது அரை இறுதியில் ரபேல் நடால் - மெட்வதேவ் மோதினர். அதில் மெட்வதேவ் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் தீம், மெட்வதேவ் களம் கண்டனர். முதல் செட்டை தீயாய் வேகம் காட்டிய தீம் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். ஆனாலும் 2வது செட் டைபிரேக்கர் வரை நீண்டது. கொஞ்சம் சுதாரித்த மெட்வதேவ் அந்த செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார்.
கடைசி செட்டிலும் சிறப்பாக விளையாடி 6-4 என்ற கணக்கில் வென்ற மெட்வதேவ் முதல் முறையாக ஏடிபி பைனல்ஸ் தொடரில் கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இந்த போட்டி 2மணி, 42 நிமிடங்கள் நீண்டது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து மெட்வதேவ் தொடர்ந்து வெல்லும் 10வது போட்டி இது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலும் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். அதுமட்டுமல்ல, செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் தீம் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பழி தீர்க்கும் வகையில் இறுதி ஆட்டம் அமைந்தது.
ஆனால் வெற்றிக்கு பிறகு பேசிய மெட்வதேவ், பெரும்பாலும் டொமினிக்கை புகழும் வகையிலேயே பேசினார். ‘வாவ் என்ன ஒரு ஆட்டம். இது எனது சிறந்த வெற்றிகளில் ஒன்று. ஒரு சிறந்த வீரருக்கு எதிராக 2மணி, 42நிமிடங்களுக்கு 3 செட்கள் விளையாடி இருக்கிறேன். டொமினிக் நீங்கள் ஏற்கனவே சாதித்ததற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். டென்னிஸ் வரலாற்று புத்தகத்தில் உங்கள் பெயர் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டது. அற்புதம். இந்த ஆண்டு நீங்கள் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று உள்ளீர்கள். நம்ப முடியாத வகையில் உங்கள் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இதுபோல் இன்னும் நீங்கள் பல போட்டிகளில் அசத்தலாக விளையாடி சாதிக்க உள்ளீர்கள்’ என்றார் மெட்வதேவ். உலக அளவில் 4வது ரேங்க் வீரரான மெட்வதேவ் (24 வயது), முன்னணி வீரர்களான ஜோகோவிச், நடால், தீம் ஆகியோரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 50 ஆண்டு கால ஏ.டி.பி. பைனல்ஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் டாப் 3 வீரர்களை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டம் இல்லை
ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெட்வதேவ் தனது வெற்றியைக் கொண்டாடாமல் மிக அமைதியாக முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தனது பாக்கெட்டில் இருந்த பந்தை கீழே போட்டுவிட்டு எதிர்த்து விளையாடிய தீமுடன் கைகுலுக்க வலையை நோக்கி சென்றார். இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். 2019 யு.எஸ். ஓபன் தொடரின்போது மெட்வதேவ் மோசமாக நடந்து கொண்டதால் ரசிகர்கள் அவரை கேலி செய்து கூக்குரலிட்டனர். இறுதிப் போட்டியில் நடாலிடம் 5 செட்கள் கடுமையாகப் போராடி தோற்ற பின்னர் இனி எந்த போட்டியில் வென்றாலும் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றாலும் அமைதி காக்கப் போவதாகக் கூறுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி திருச்சி பயணம்
06 Nov 2025புதுக்கோட்டை, திருச்சி - புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார்.
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை: தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
6 மாவட்டங்களில் இன்று கனமழை
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்
-
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு
06 Nov 2025சென்னை, வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.,யில் மாணவிகளுக்கு கவர்னர் பட்டங்களை வழங்கினார்
06 Nov 2025கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக கவர்னர் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
பீகாரில் வாக்குத்திருட்டை தடுப்பது இளைஞர்களின் பொறுப்பு: ராகுல்
06 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் பா.ஜ.க. வாக்குகளைத் திருட முயற்சிக்கும் அதனை தடுக்க இளைர்களின் பொறுப்பு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
06 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்
06 Nov 2025சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
-
முதல்வரின் பெருந்தன்மையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
06 Nov 2025நெல்லை, முதல்வரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள் என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்ற
-
பா.ஜ.க.வின் போராட்டம் அரசியலுக்கான வேடம் : அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
06 Nov 2025சென்னை, தி.மு.க. அரசில் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பா.ஜ.க.
-
பீகார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்
06 Nov 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா சென்ற காரின் மீது ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
06 Nov 2025சென்னை, அன்பு மணியை அமைச்சராக்கியது தவறு என்று ராமதாஸ் கூறினார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி தகவல்
06 Nov 2025சென்னை, 2016 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை
06 Nov 2025சென்னை: மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாட திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆய்வு: 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
06 Nov 2025மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார்.
-
பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு
06 Nov 2025தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது: சீமான்
06 Nov 2025சென்னை, எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் - ட்ரம்ப் திட்டவட்டம்
06 Nov 2025வாஷிங்டன்: தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ஜெர்மனியில் நடந்த கொடூரம்: நோயாளிகளை ஊசி போட்டு கொன்ற ஆண் செவிலியர்..!
06 Nov 2025பெர்லின்: ஜெர்மனியில் நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேர்தலில் தோற்றால் கட்சி பதவிகள் பறிப்பு: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
06 Nov 2025சென்னை, சங்கரன்கோவில், நெல்லை தி.முக. நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் தோற்றால்
-
அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி: கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
06 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
துரித அஞ்சல் கட்டணம் உயர்வு: செல்வப்பெருந்தகை கண்டனம்
06 Nov 2025புதுடெல்லி: பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம், துரித அஞ்சல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி: டி.டி.வி. தினகரன் தகவல்
06 Nov 2025சென்னை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
இந்தியாவில் மதுபானங்கள் பயன்பாடு 7 சதவீதம் உயர்வு
06 Nov 2025புதுடெல்லி: இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்
06 Nov 2025வாஷிங்டன்: நாசா தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.


