எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : நிட்டோ ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஆண்டு இறுதி உலக தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்கள் மோதும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடர் லண்டனில் நடந்தது. டோக்கியோ 1970, லண்டன் 2020 என 2 பிரிவுகளாக நடந்த லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.
முதல் அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்திய டொமினிக் தீம் (3வது ரேங்க்) பைனலுக்கு முன்னேறினார். 2வது அரை இறுதியில் ரபேல் நடால் - மெட்வதேவ் மோதினர். அதில் மெட்வதேவ் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் தீம், மெட்வதேவ் களம் கண்டனர். முதல் செட்டை தீயாய் வேகம் காட்டிய தீம் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். ஆனாலும் 2வது செட் டைபிரேக்கர் வரை நீண்டது. கொஞ்சம் சுதாரித்த மெட்வதேவ் அந்த செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார்.
கடைசி செட்டிலும் சிறப்பாக விளையாடி 6-4 என்ற கணக்கில் வென்ற மெட்வதேவ் முதல் முறையாக ஏடிபி பைனல்ஸ் தொடரில் கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இந்த போட்டி 2மணி, 42 நிமிடங்கள் நீண்டது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து மெட்வதேவ் தொடர்ந்து வெல்லும் 10வது போட்டி இது. பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியிலும் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். அதுமட்டுமல்ல, செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் தீம் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பழி தீர்க்கும் வகையில் இறுதி ஆட்டம் அமைந்தது.
ஆனால் வெற்றிக்கு பிறகு பேசிய மெட்வதேவ், பெரும்பாலும் டொமினிக்கை புகழும் வகையிலேயே பேசினார். ‘வாவ் என்ன ஒரு ஆட்டம். இது எனது சிறந்த வெற்றிகளில் ஒன்று. ஒரு சிறந்த வீரருக்கு எதிராக 2மணி, 42நிமிடங்களுக்கு 3 செட்கள் விளையாடி இருக்கிறேன். டொமினிக் நீங்கள் ஏற்கனவே சாதித்ததற்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். டென்னிஸ் வரலாற்று புத்தகத்தில் உங்கள் பெயர் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டது. அற்புதம். இந்த ஆண்டு நீங்கள் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று உள்ளீர்கள். நம்ப முடியாத வகையில் உங்கள் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இதுபோல் இன்னும் நீங்கள் பல போட்டிகளில் அசத்தலாக விளையாடி சாதிக்க உள்ளீர்கள்’ என்றார் மெட்வதேவ். உலக அளவில் 4வது ரேங்க் வீரரான மெட்வதேவ் (24 வயது), முன்னணி வீரர்களான ஜோகோவிச், நடால், தீம் ஆகியோரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 50 ஆண்டு கால ஏ.டி.பி. பைனல்ஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் டாப் 3 வீரர்களை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டம் இல்லை
ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெட்வதேவ் தனது வெற்றியைக் கொண்டாடாமல் மிக அமைதியாக முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தனது பாக்கெட்டில் இருந்த பந்தை கீழே போட்டுவிட்டு எதிர்த்து விளையாடிய தீமுடன் கைகுலுக்க வலையை நோக்கி சென்றார். இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். 2019 யு.எஸ். ஓபன் தொடரின்போது மெட்வதேவ் மோசமாக நடந்து கொண்டதால் ரசிகர்கள் அவரை கேலி செய்து கூக்குரலிட்டனர். இறுதிப் போட்டியில் நடாலிடம் 5 செட்கள் கடுமையாகப் போராடி தோற்ற பின்னர் இனி எந்த போட்டியில் வென்றாலும் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடப் போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றாலும் அமைதி காக்கப் போவதாகக் கூறுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.