முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைக்கபட்டதாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு - IV (தொகுதி-IV -ல் அடங்கிய பதவிகள்) 2018-2019 மற்றும் 2019-2020 combined civil services examination-IV (group iv services))-ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 02.11.2020 முதல் 26.11.2020 வரை மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக 25.11.2020 மற்றும் 26.11.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 05.12.2020 மற்றும் 19.12.2020 ஆகிய தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் e-mail மூலம் தனியே தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து