எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்பலி இல்லாமல் தடுத்து ஒட்டுமொத்த மக்களை பாதுகாத்து, பாராட்டை பெற்ற முதல்வர் மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதா என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநில அம்மா பேரவை சார்பில் கொரோனா நோய் தொற்றார்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து உணவு கூடத்தை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அம்மாவின் அருளாசியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி 147 நாட்களைக் கடந்து உணவே மருந்தாக அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நிவர் புயல் தாக்குதலால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படாவண்ணம் முதல்வர் புயலை காட்டிலும் அதி தீவிர போர்க்கால நடவடிக்கை எடுத்தார்.
கடந்த 21-ம் தேதி வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி 23-ம் தேதி தாழ்வு மண்டலமாகவும், அதே நாளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து 23-ம் தேதி முதல்வர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதனை தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து 24 மணி நேரமும் புயல் குறித்து நிலவரம் கேட்டு அறிந்து உடனுக்குடன் எங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக 25-ம் தேதி தொடர் மழையால் தமிழகம் முழுவதும் 14,144 பாசன ஏரிகளில் 1,697 ஏரிகள் நிரம்பின. இதில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவு எட்டியது. இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரடியாக சென்று அதனை பார்வையிட்டு அதன் உபரி நீரை உடனடியாகவெளியேற்ற உத்தரவிட்டார். புயல் கரையை கடந்த உடன் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்திற்கு கடந்த 26-ம் தேதி நேரடியாக சென்று வாழை தோப்புகளை பார்வையிட்டு, அதன் தொடர்ச்சியாக துறைமுகப் பகுதி, மீனவர்கள் பகுதி அதே போல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடத்தில் மனுக்கள் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாது அங்கிருந்து முதியவர் ஒருவரிடம் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து தாய் நாட்டின் தலைமகன் என்பதை மீண்டும் நிரூபித்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதே போல் துணை முதல்வரும் சென்னை வேளச்சேரி, தரமணி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதே போல் முதல்வரும், துணை முதல்வரும் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிப்புயடையும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று கழகத்தின் சார்பில் உத்தரவிட்டிருந்தனர்.
அதன் அப்படி கழக நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இன்றைக்கு பல்வேறு ஊடங்கள் கூட முதல்வர் எடுத்த நடவடிக்கையால் உயிர் சேதமும் ஏற்படவில்லை அதேபோல் பொருள் சேதம் குறைவாக உள்ளது என்று பாராட்டியிருந்தனர். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழகத்தின் நிலவரங்களை கேட்டறிந்து தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறி தமிழகத்தின் செயல்பாட்டினை பாராட்டினார். இதையெல்லாம் தெரிந்த ஸ்டாலின் இந்த நிவர் புயலிலும் கூட அரசியல் செய்ய நினைக்கிறார். கொளத்தூர், வில்லிவாக்கம் உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளில் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளேன் என்று ஸ்டாலின் பெருமையாக கூறி அரசை பற்றி குறை கூறுகிறார்.
ஆனால் இன்றைக்கு 15 மாவட்டங்களில் நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து மக்களைப் பாதுகாக்கும் வண்ணம் 2,25,398 நபர்களை 3,042 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு அங்கு அவர்கள் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாது மேலும் 850 நிரந்தர மருத்துவ முகாம்களும், 224 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் இதுவரை 73,000 மேற்பட்டோர் மருத்துவ முகாமில் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 4,133 தாழ்வானபகுதிகளை கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பெய்யும்போது மழை நீர் தேங்கிமழை விட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வடிந்து விடக் கூடிய நிலையை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளோம். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் எல்லாம் மழைநீர் சூழ்ந்ததால் அது வெளியேற்றவே ஏறத்தாழ ஆறு மணி நேரம் ஆகும் என்பது ஸ்டாலின் நன்றாக தெரியும். தொடர்ந்து முதல்வர் களநிலவரங்களை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கேட்டறிந்து உடனுக்குடன் உரிய வழிகாட்டுதலை வழங்கினார்.
அதுமட்டுமல்லாது கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் 100 சென்டிமீட்டர் மழை பெய்தது ஆனால் புரட்சித்தலைவி அம்மா தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று அதனை ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கை எடுத்தார். கஜா புயல், தானே புயல்,ஓகி புயல் இதற்கெல்லாம் மேலாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் எல்லாம் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியது இன்றைக்கு அம்மாவின் வழியில் மக்களை காப்பாற்றுவதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது என்று பல்வேறு மாநிலங்கள் பாராட்டி வருகின்றன.
குறிப்பாக இந்த நிவர் புயலிலும் முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கையால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதன் மூலம் இயற்கை கையாளுவதில் ஒரு புதிய இலக்கணத்தை முதல்வர் படைத்துள்ளார் என்று தமிழக மக்களே முதல்வரை பாராட்டுகின்றனர்.
முதல்வரும், துணை முதல்வரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகஆறுதல் கூறி வருகின்றனர். இதில் முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பாதிப்பு கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் ஸ்டாலின் அரசின் போர்க்கால நடவடிக்கைகளை தெரிந்து கொண்டே மனசாட்சி இல்லாமல் இதில் கூட அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள்.
புயல் கரையை கடக்கும் போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய போது முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்தும், மின்னல் இடி தாங்கியோ எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை மேலும் தற்பொழுது முதல்வர் வழிகாட்டுதல்படி உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்ந்து இரவு பகல் பாராது பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவிலேயே இயல்பு நிலை திரும்பி உள்ளது ஆகவே மக்களைக் காப்பதில் அம்மா அரசுக்கு நிகர் எந்த அரசும் கிடையாது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் பாரத பிரதமர் பாராட்டைப் பெற்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறியது போல் தற்போது கடும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களையும், அதிகப் பொருள் சேதங்கள் இல்லாமல் காப்பது எப்படி என்று அனைத்து மாநிலங்களும் வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.