எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்பலி இல்லாமல் தடுத்து ஒட்டுமொத்த மக்களை பாதுகாத்து, பாராட்டை பெற்ற முதல்வர் மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதா என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநில அம்மா பேரவை சார்பில் கொரோனா நோய் தொற்றார்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து உணவு கூடத்தை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அம்மாவின் அருளாசியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி 147 நாட்களைக் கடந்து உணவே மருந்தாக அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நிவர் புயல் தாக்குதலால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படாவண்ணம் முதல்வர் புயலை காட்டிலும் அதி தீவிர போர்க்கால நடவடிக்கை எடுத்தார்.
கடந்த 21-ம் தேதி வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி 23-ம் தேதி தாழ்வு மண்டலமாகவும், அதே நாளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து 23-ம் தேதி முதல்வர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதனை தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து 24 மணி நேரமும் புயல் குறித்து நிலவரம் கேட்டு அறிந்து உடனுக்குடன் எங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக 25-ம் தேதி தொடர் மழையால் தமிழகம் முழுவதும் 14,144 பாசன ஏரிகளில் 1,697 ஏரிகள் நிரம்பின. இதில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவு எட்டியது. இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரடியாக சென்று அதனை பார்வையிட்டு அதன் உபரி நீரை உடனடியாகவெளியேற்ற உத்தரவிட்டார். புயல் கரையை கடந்த உடன் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்திற்கு கடந்த 26-ம் தேதி நேரடியாக சென்று வாழை தோப்புகளை பார்வையிட்டு, அதன் தொடர்ச்சியாக துறைமுகப் பகுதி, மீனவர்கள் பகுதி அதே போல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடத்தில் மனுக்கள் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாது அங்கிருந்து முதியவர் ஒருவரிடம் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து தாய் நாட்டின் தலைமகன் என்பதை மீண்டும் நிரூபித்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதே போல் துணை முதல்வரும் சென்னை வேளச்சேரி, தரமணி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதே போல் முதல்வரும், துணை முதல்வரும் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிப்புயடையும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று கழகத்தின் சார்பில் உத்தரவிட்டிருந்தனர்.
அதன் அப்படி கழக நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இன்றைக்கு பல்வேறு ஊடங்கள் கூட முதல்வர் எடுத்த நடவடிக்கையால் உயிர் சேதமும் ஏற்படவில்லை அதேபோல் பொருள் சேதம் குறைவாக உள்ளது என்று பாராட்டியிருந்தனர். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழகத்தின் நிலவரங்களை கேட்டறிந்து தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறி தமிழகத்தின் செயல்பாட்டினை பாராட்டினார். இதையெல்லாம் தெரிந்த ஸ்டாலின் இந்த நிவர் புயலிலும் கூட அரசியல் செய்ய நினைக்கிறார். கொளத்தூர், வில்லிவாக்கம் உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளில் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளேன் என்று ஸ்டாலின் பெருமையாக கூறி அரசை பற்றி குறை கூறுகிறார்.
ஆனால் இன்றைக்கு 15 மாவட்டங்களில் நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து மக்களைப் பாதுகாக்கும் வண்ணம் 2,25,398 நபர்களை 3,042 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு அங்கு அவர்கள் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாது மேலும் 850 நிரந்தர மருத்துவ முகாம்களும், 224 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் இதுவரை 73,000 மேற்பட்டோர் மருத்துவ முகாமில் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 4,133 தாழ்வானபகுதிகளை கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பெய்யும்போது மழை நீர் தேங்கிமழை விட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வடிந்து விடக் கூடிய நிலையை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளோம். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் எல்லாம் மழைநீர் சூழ்ந்ததால் அது வெளியேற்றவே ஏறத்தாழ ஆறு மணி நேரம் ஆகும் என்பது ஸ்டாலின் நன்றாக தெரியும். தொடர்ந்து முதல்வர் களநிலவரங்களை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கேட்டறிந்து உடனுக்குடன் உரிய வழிகாட்டுதலை வழங்கினார்.
அதுமட்டுமல்லாது கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் 100 சென்டிமீட்டர் மழை பெய்தது ஆனால் புரட்சித்தலைவி அம்மா தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று அதனை ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கை எடுத்தார். கஜா புயல், தானே புயல்,ஓகி புயல் இதற்கெல்லாம் மேலாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் எல்லாம் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியது இன்றைக்கு அம்மாவின் வழியில் மக்களை காப்பாற்றுவதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது என்று பல்வேறு மாநிலங்கள் பாராட்டி வருகின்றன.
குறிப்பாக இந்த நிவர் புயலிலும் முதல்வர் எடுத்த தீவிர நடவடிக்கையால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதன் மூலம் இயற்கை கையாளுவதில் ஒரு புதிய இலக்கணத்தை முதல்வர் படைத்துள்ளார் என்று தமிழக மக்களே முதல்வரை பாராட்டுகின்றனர்.
முதல்வரும், துணை முதல்வரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகஆறுதல் கூறி வருகின்றனர். இதில் முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பாதிப்பு கணக்கு எடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணங்கள் வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் ஸ்டாலின் அரசின் போர்க்கால நடவடிக்கைகளை தெரிந்து கொண்டே மனசாட்சி இல்லாமல் இதில் கூட அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள்.
புயல் கரையை கடக்கும் போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய போது முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்தும், மின்னல் இடி தாங்கியோ எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை மேலும் தற்பொழுது முதல்வர் வழிகாட்டுதல்படி உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்ந்து இரவு பகல் பாராது பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவிலேயே இயல்பு நிலை திரும்பி உள்ளது ஆகவே மக்களைக் காப்பதில் அம்மா அரசுக்கு நிகர் எந்த அரசும் கிடையாது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் பாரத பிரதமர் பாராட்டைப் பெற்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறியது போல் தற்போது கடும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களையும், அதிகப் பொருள் சேதங்கள் இல்லாமல் காப்பது எப்படி என்று அனைத்து மாநிலங்களும் வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
தற்போது பிரதமர் பதவியோ, பீகார் முதல்வர் பதவியோ காலியாக இல்லை : பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
29 Oct 2025பாட்னா : பீகார் முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் தற்போது காலியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
தங்கம் வென்ற கபடி வீரருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் திருமாவளவன்
29 Oct 2025சென்னை : தங்கம வென்ற கபடி வீரருக்கு திருமாவளவன் ரூ.50 ஆயிரம் வழங்கி வாழ்த்தியனார்.
-
வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு: தமிழகத்தில் வரும் 10-ம் தேதிக்கு பிறகு சூறாவளி ஆட்டம் துவக்கம்
29 Oct 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 10-ம் தேதிக்கு பிறகு சூறாவளி காற்று ஆரம்பமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துபாயில் திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள் விற்பனை
29 Oct 2025துபாய் : துபாயில் திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்யபடுகின்றன.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க ரூ.48.33 கோடியில் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைப்பு
29 Oct 2025சென்னை : பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களை விளையாட்டுத் துறையில் சாதிக்க ஊக்குவிக்கும் அரசு: அமைச்சர்
29 Oct 2025தஞ்சை : விளையாட்டுத்தானே என்று எண்ணாமல் மாணவர்கள், விளையாட்டையும் வாழ்க்கைத் தொழிலாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.


