எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : நாட்டில் உள்ள 9 கோடிக்கும் அதிகமான சிறு, குறு விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 3-வது கட்ட தவணையாக ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். அப்போது பேசிய அவர் விவசாயிகளுடன் மனம் திறந்து பேசத் தயார் என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள், மத்திய அரசின் உதவி திட்டங்கள், விவசாயிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார். ஆனால் மேற்கு வங்கத்தில் இந்த உதவி கிடைக்கவிடாமல் மம்தா செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கையால் ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆக்கப்பட்டார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு நிதியாண்டுக்கான 3-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான நிதி ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார்.
விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை நேரடியாக அரசின் சார்பில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக நாடுமுழுவதும் 19 ஆயிரம் இடங்களில் பிரதமர் மோடியின் பேச்சை விவசாயிகள் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான நேற்று சிறந்த நிர்வாகத்துக்கான நாளாக மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அந்த தினத்தில் விவசாயிகளுக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
விவசாயிகளுக்கு மூன்றாவது கட்ட நிதியுதவி வழங்கும் பணிகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பகல் 12 மணிக்கு துவங்கி வைத்து, 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
ஒடிசா மாநில விவசாயிகளிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கிசான் கிரெடிட் கார்டு மற்றும் அதன் மூலம், குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதை, விவசாயிகளிடம் விளக்க வேண்டும் என்றார்.
அப்போது நவீன் என்ற விவசாயி கூறுகையில், 2019-ம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு வாங்கினேன். அதன் மூலம் 4 சதவீத வட்டியில், 27 ஆயிரம் கடன் வாங்கினேன். இது இடைத்தரகர்களிடம் வழங்கும் வட்டியை விட 20 சதவீதம் குறைவு என்றார்.
பிரதமர் டெல்லியில் உரையாற்றியபோது மத்திய மந்திரிகளும், கட்சியின் முக்கிய தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் மெக்ராலிக் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மத்திய மத்திரிகள் பியூஸ் கோயல் ஹாபூரிலும், நிதின் கட்காரி அசாம் மாநிலம் சில்ஜாரிலும், கஜேந்திர செகாவத் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரிலும், ஸ்மிருதிராணி அமேதியில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திறந்த வெளி மைதானத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 ஆயிரம் விவசாயிகள் சுமார் 1000 கட்சி தொண்டர்கள் அமர இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
காலை 10 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், மாநில தலைவர் எல்.முருகன், அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பேசினார்கள். கே.டி.ராகவன், பலராமன், செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மோடி உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மோடியின் உரை விவசாயிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
05 Jun 2025சென்னை, அரசின் திட்டமாக இருந்தால்போதாது மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய
-
44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
05 Jun 2025சென்னை, சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
05 Jun 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 11-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த பழங்குடியின மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்
05 Jun 2025சென்னை, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த பழங்குடியின மாணவிக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-
பெங்களூரு வெற்றி கொண்டாட்டம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? ஐகோர்ட் கேள்வி
05 Jun 2025பெங்களூரு, வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
-
தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல் தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. தகவல்
05 Jun 2025சென்னை: தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-06-2025.
05 Jun 2025 -
ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு: பின்னணி என்ன?
05 Jun 2025விழுப்புரம், ராமதாசுடன் குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்தித்ததன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்த
-
நார்வே செஸ் தொடர்: உலக சாம்பியனை வீழ்த்திய வைஷாலி
05 Jun 2025ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
-
ஆப்கன், மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள்: அமெரிக்காவுக்குள் நுழைய தடை
05 Jun 2025நியூயார்க், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்
-
தொண்டர்கள் கைதுக்கு இ.பி.எஸ் கண்டனம்
05 Jun 2025சென்னை, ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
காசாவில் 2 பிணை கைதிகளின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல்
05 Jun 2025காசா: காசாவில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் நிலவில் வெற்றிகர தரையிறக்கம்
05 Jun 2025டோக்கியோ: நிலவின் வடக்கு பகுதியில் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் தரையிறங்கியது.
-
உலக சுற்றுச்சூழல் தினம்: 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி
05 Jun 2025புதுடில்லி, டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை நட்டார்.
-
தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை சந்தித்தார் அன்புமணி
05 Jun 2025விழுப்புரம், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
-
லைகா நிறுவனத்துக்கு ரூ. 21 கோடியை நடிகர் விஷால் வட்டியுடன் தர வேண்டும் சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 Jun 2025சென்னை: லைகா நிறுவனத்துக்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு துயரம்: இ.பி.எஸ். இரங்கல்
05 Jun 2025சென்னை, பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க.
-
காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி
05 Jun 2025சென்னை, மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
05 Jun 2025நியூயார்க்: உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது
05 Jun 2025சென்னை, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, தி.மு.க.
-
இறந்த உடல்களை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் விமர்சனம்
05 Jun 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.
-
சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை
05 Jun 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்.
-
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538 கோடியில் ஒப்பந்தம்
05 Jun 2025சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.
-
எச்சரிக்கை விடுத்த போலீஸ்; மறுத்து அடம் பிடித்த ஆர்.சி.பி. 11 பேர் பலி சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்
05 Jun 2025பெங்களூரு: போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் ஆர்.சி.பி. நிர்வாகம் அடம் பிடித்ததே 11 பேர் பலியானதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.