முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வின் துரோகங்களை தமிழக மக்கள் மறக்கவில்லை: பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தி.மு.க.வின் துரோகங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறினார்.

மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பாலையில் நம்ம ஊர் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பலன் தரும். விளைபொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியும். இதனால் உண்மையான விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றனர். மொழிக்கொள்கையிலும் தி.மு.க. நாடகமாடுகிறது.

தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிகளைக் கற்பிக்கின்றனர். தலைவர்களைப் போற்றுவதில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது.  தமிழர்களுக்கு தி.மு.க. ஒருபோதும் பாதுகாப்பாக இருந்ததில்லை. இலங்கைப் படுகொலைகளுக்கு தி.மு.க.வே காரணம். இந்த துரோகங்களை மக்கள் மறக்கவில்லை. தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.

தி.மு.க.வில் அக்கட்சி பெண் எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை. இதைக் கண்டிக்காமல் மற்ற பெண்களுக்காக கனிமொழி குரல் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து