முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி ராஜினாமா கடிதம் அனுப்பிய எம்.எல்.ஏ.

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 47-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

ஆனால் 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. 

அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு தெரிவித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளன. அந்த வகையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அப்ஹே சிங் சௌதலா. இவர் அரியானா சட்டசபை சபாநாயகருக்கும் நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜனவரி 26-ம் தேதிக்குள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவில்லை என்றால் இந்த கடிதத்தை எனது ராஜினாமா கடிதமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.வின் ராஜினாமா கடிதத்தால் அரியானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து