முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 3006 மையங்கள்: கொரோனா தடுப்பூசி திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

இந்தியாவில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  இன்று காலை 10.30 மணிக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். 

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

முதற்கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி நபர்களுக்கு செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து