எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் அமையப் பெற்றுள்ள அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு குடும்பம், குடும்பமாக வாருங்கள் என்று நேற்று சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், தன்னையே அர்ப்பணித்து தவவாழ்வு வாழ்ந்து மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-ஆவது பிறந்த நாளை கழக அம்மா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது சம்பந்தமாக, கழக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.
அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அம்மா அவர்களின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாகவும், விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அம்மா பேரவை நிர்வாகிகள் துடிப்புடன் களப்பணி ஆற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாநில துணை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அம்மா பேரவையின் சார்பில் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு, தலைமைக் கழக நுழைவு வாயிலில் முகப்பு அமைக்கப்பட்டு, செண்டை மேளம் முழங்க, சாலைகளின்
இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், குருத்தோலைகளும் அழகுற அமைக்கப்பட்டு, விழாக் கோலம் பூண்டிருந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும்
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வறுமாறு:-
வருகின்ற 30.01.2021 சனிக்கிழமை அன்று பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், தமிழர் குலச்சாமி புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களுக்கும், மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கூ.கல்லுப்பட்டியில் உள்ள டி.குன்னத்தூரில் அமையப்பெற்றுள்ள தமிழர் குலச்சாமி அம்மாவின் திருக்கோவில் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் எடிப்பாடியார் அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் நேரில் வருகைதந்து, தங்களது பொற்கரங்களால் “அம்மா ஆலயத்தை திறந்து வைத்து” புரட்சித்தலைவர், புரட்சிதலைவியின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, வழிபட்டு வணங்கி நல் ஆசி பெற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கும் இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக, நகர கழக, உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தொண்டாற்றி வருகின்ற அம்மாவின் தூய தொண்டர்கள் அனைவரையும் குடும்பம் குடும்பமாக, பங்கேற்க செய்வதோடு கழகம் தொடங்கிய காலத்திலிருந்து கழகத்திற்கு தொண்டாற்றி வருகின்ற கழகத்தின் மூத்த தொண்டர்களின் உழைப்பை கௌரவிக்கும் விதமாக, 234 தொகுதிகளிலும், மாவட்டக் கழகங்களின் மூலம், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் மூத்த கழகத் தொண்டர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குடும்ப நல நிதி, திருவிளக்கு உள்ளிட்ட பாராட்டு பரிசுகளையும் வழங்கி, தன்னலமற்ற ஊழைப்பினை வாழ்த்தி, பொன்னாடையும், மாலையும் அணிவித்து, சிறப்பு செய்திவுடம் ஆலயத்தினை திறந்துவைத்து இருபெரும் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நாள்தோறும் வழிபாடு நடத்தி அருளாசி பெற்றிடவும், வரலாறு படைக்கின்ற வகையில் இவ்விழாவினை சிறப்பாக நடத்திடுவோம்.
தமிழர்குலச்சாமி அம்மா அவர்களின் 73-வது பிறந்த தின நன்நாளை முன்னிட்டு நாடெங்கும் விளையாட்டுப் போட்டிகள், மரம் நடுவிழா, மருத்துவ முகாம், ரத்த தானம், கண் தானம், உடல் தானம், அன்னதானம், பசுதானம் உள்ளிட்ட தான தருமங்களையும், நலத்திட்ட உதவிகளையும் அம்மா அவர்களின் திருப்பெயரிலே நாளெல்லாம் நாட்டுமக்களுக்கு வழங்கி, அம்மாவின் புகழை அழியாப் புகழாக நீடித்த புகழலாக, நிலைத்தப் புகழாக, இந்த வான் உள்ளவரை, இந்த பூமி உள்ளவரை, இந்த வையகம் உள்ளவரை எந்நாளும் கட்டிக் காத்திட கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை உறுதி ஏற்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...