முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை நானும் தடுப்பூசி போட்டு கொள்கிறேன் : அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மருத்துவ துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாளை ( வெள்ளிக்கிழமை) நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கிறேன்.   

ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக ஐ.எம்.ஏ. உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள உள்ளேன் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து