முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்ரவரி 2-ல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கூடுகிறது

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

பிப்ரவரி 2-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்றும், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், பிப்ரவரி 2-ம் தேதி கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழக கவர்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டியிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அன்றே, அதாவது பிப்ரவரி 2-ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார்கள். அவ்வமயம் தங்கள் வருகையை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது நிகழும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிப்ரவரி 2-ம் தேதி கூட இருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து