முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத முடியாமல் போன கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூடுதலாக எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி யு.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தேர்வு எழுதி வரவில்லை. பலர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தனர். கொரோனா நோயாளிகளாகவும், ககொரோனா நோயிலிருந்து சிகிச்சை முடித்த நிலையில் இருந்ததாலும், போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை என்பதால் தேர்வு எழுத முடியவில்லை.

இதையடுத்து, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டும எனக் கோரி தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, கிருஷ்ணா முரேரா அமர்வில் நேற்று  காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ஆஜரானார்.  அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதை தவற விட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை.

இதற்குரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை. மத்திய அரசிடம் இருந்து நேற்று முன்தினம் இரவுதான் இதற்கான உத்தரவு எங்களுக்குக் கிடைத்தது எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து