முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் 10, 12- ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 12 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தினந்தோறும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை மையங்கள் நிரம்பி வருகின்றன. இந்தநிலையில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முழு ஊரடங்கு 8, 15 அல்லது 21 நாட்களுக்கு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்த இறுதி முடிவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நாளை  (புதன்கிழமை) மந்திரி சபையை கூட்டி எடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, மராட்டியத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

மாணவர்களின் உடல் நலனுக்கே முன்னிரிமை என தெரிவித்துள்ள மராட்டிய அரசு, மே மாத இறுதியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜுன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறும் என்ற அம்மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் கொரோனா சூழல் மேம்படுவதை பொருத்து தேர்வு நடைபெறும் சரியான தேதி பின்னர் வெளியிடப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து