முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் : மதுரை ஆதீனம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று மதுரை ஆதீனம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து மதுரை ஆதீனம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

மதுரை திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாசார்ய சுவாமிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பிலவ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

நமது தமிழ் மரபுகள், மனித குலம் சிறந்து தழைத்தோங்க பல வழிமுறைகளை தமிழ் பண்டிகைகளின் வாயிலாக நமக்கு கொடுத்துள்ளன. நாம் வாழ்கின்ற இடத்தை தூய்மைப்படுத்துதல், வழிபாட்டறையை அலங்கரித்து வழிபாடு செய்தல், உணவு பொருட்களை பகிர்ந்து உண்ணுதல், உறவுகளோடு அளவளாவுதல் போன்றவை பண்டிகைக்காக மட்டுமல்லாது என்றென்றும் தமிழர் வாழ்வியலோடு ஒன்றிணைந்தவை. 

வருகின்ற பிலவ ஆண்டு பிறப்பினை மக்கள் அனைவரும் பல்வேறு சாதி, சமய, இன மற்றும் மொழி வேறுபாடுகளை புறந்தள்ளி, இவ்வுலகில் இன்ப துன்பங்கள் எவையும் நிரந்தரமற்றவை என்பதை உணர்ந்து ஒற்றுமையோடும், இந்திய திருநாட்டின் ஜனநாயகத்தினை காக்க வேண்டும் என்ற உறுதியோடும், இப்பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்போடும் இப்புத்தாண்டினை சிறப்போடு வரவேற்போம். மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்றிட எல்லாம் வல்ல சிவபெருமான் பார்வதி தேவியாரை பிரார்த்தித்து ஆசிர்வதிக்கின்றோம். இவ்வாறு அதில் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து