முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதற்றமான மனநிலையில் கோலி : முன்னாள் வீரர் சச்சின் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: எப்போதும் கோலி ஒரு பதற்றமான மனநிலையிலேயே இருக்கிறார் என்று முன்னாள் வீரர் சச்சின் குற்றச்சாட்டியுள்ள நிலையில், இதுவே அவர் ஃபார்மில் இல்லாமல் இருக்க காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

டாப் வீரராக... 

இங்கிலாந்து - இந்தியா இரு அணிகளுக்கு இடையே அதிக ரன்களை எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர், 32 டெஸ்ட்களில் 2,535 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக எடுத்து இருஅணிகளுக்கும் டாப் வீரராக இருக்கிறார். விராட் கோலி குறித்து சச்சின் டெண்டுல்கல் கூறியதாவது.,

பதற்றங்கள் அதிகம்... 

விராட் கோலி சரியாகத் தொடங்குவதில்லை, இந்த மனநிலையினால் பல தவறுகளைச் செய்கிறார். ஆரம்பம் சரியில்லை என்றால் நிறைய விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். பதற்றங்கள் அதிகம் இருந்தால் கால் நகர்வுகளை அதிகம் செய்வதன் மூலம் ஈடுகட்டப் பார்ப்போம். இதுதான் கோலிக்கு நடக்கிறது.

மனத்துடன் சேர்ந்து... 

பார்மில் இல்லாத பேட்ஸ்மென் என்ன செய்வார் என்றால் ஒன்று லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு ஓடி வந்து அதீத கிராஸ் செய்வார். அல்லது கால்களை நகர்த்தவே மாட்டார். இது அனைவருக்கும் ஏற்படக்கூடியதுதான். பார்ம் என்பது நம் மனநிலை மற்றும் மனத்துடன் சேர்ந்து உடலும் இணைந்து இயங்குவதாகும். இவ்வாறு கூறுகிறார் சச்சின் டெண்டுல்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து