முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வழக்குகளில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்கியது எழும்பூர் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 3 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை: நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் நேற்று ஆஜரானார். அப்போது தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல் துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் மீரா மிதுன் புகார் அளித்தார். அதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மொத்தம் 4 வழக்குகளில் கைதான நிலையில் 2 வழக்குகளில் மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து