முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்: மம்தா நாளை வேட்புமனு தாக்கல்

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      அரசியல்
Image Unavailable

பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நாளை 10-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.  இருப்பினும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி முதல்வரானார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நாளை 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து