எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக, அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலான இந்த முடிவு வருத்தமளிக்கிறது; இது திரும்பப்பெறப்பட வேண்டும்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரிலும் கார் ஆலைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மூடப்போவதாக அறிவித்து உள்ளது.
குஜராத் ஆலை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், சென்னை ஆலை அடுத்த ஆண்டிலும் மூடப்படவுள்ளன. இந்த ஆலைகள் மூடப்பட்டால் நேரடியாக 8,000 பணியாளர்களும், மறைமுகமாக 30 ஆயிரம் பணியாளர்களும் வேலையிழப்பார்கள். இது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமின்றி, தமிழகம், குஜராத் மாநிலங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும்.
இரு கார் ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதற்கான பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்ததாகவும், அவை சாத்தியமற்றவை என்பது உறுதியானதால்தான் கார் ஆலைகளை மூடுவதற்கான முடிவை எடுத்ததாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் முடிவு பற்றி விவாதிப்பதோ, விமர்சிப்பதோ இந்தத் தருணத்தில் சரியானதாக இருக்காது.
ஆனால், இந்த முடிவால் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதனால், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இரு ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதை உறுதி செய்வது உள்ளிட்ட அனைத்து சாத்தியக் கூறுகளையும் தமிழகம் - குஜராத் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஆராய வேண்டும்.
தமிழகத்தில் ஏற்கெனவே நோக்கியா நிறுவனம் திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வந்த செல்பேசி உற்பத்தி ஆலை மூட முடிவெடுத்த போது, அம்முடிவை மாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அந்த ஆலையில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடைசி வரை பணியில் இருந்த சுமார் 800 பேருக்கு மட்டும் தான் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.
நோக்கியா ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு இன்று வரை சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை அவர்களின் வாழ்வாதார இழப்பை எந்த வகையிலும் ஈடு செய்யவில்லை. அதே போன்ற நிலை ஃபோர்டு கார் ஆலைகளின் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தாலேகோன் நகரில் அமைத்துள்ள அதன் கார் ஆலையை மூடுவதற்கான முயற்சிகளை கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கியது. கடந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டு தொகையையும் அறிவித்தது. ஆனால், அதை ஏற்காத தொழிற்சங்கங்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, கார் ஆலையை மூடுவதற்கான அனுமதியை மகாராஷ்டிரா அரசு வழங்கவில்லை.
தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பிறகும் கூட ஆலையை மூட அனுமதிக்கப்படவில்லை. ஃபோர்டு பணியாளர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசும் அத்தகைய நிலையை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஃபோர்டு ஆலைகளை தொடர்ந்து இயக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. இந்திய கார் சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் பங்கு 2 விழுக்காட்டுக்கும் குறைவு என்பது உண்மை. இதற்கான காரணம். ஃபோர்டு கார்களின் விலை அதிகம் என்பது தான்.
அதே நேரத்தில், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதை விட, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஃபோர்டு நிறுவனம் அதன் வணிக உத்திகளில் சில மாற்றங்களைச் செய்யும் பட்சத்தில் ஆலையை லாபத்தில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, சென்னை ஃபோர்டு ஆலையை தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அந்த நிறுவனத்துடன் தமிழக தொழில்துறை அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். ஒருவேளை அது சாத்தியமாகவில்லை என்றால், கார் ஆலை தொழிலாளர்களுக்கு, அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் தமிழக அரசு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.
ஃபோர்டு ஆலை வேறு ஏதேனும் மகிழுந்து நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டால், புதிய நிர்வாகத்தில் இப்போதுள்ள பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-06-2025.
03 Jun 2025 -
சிந்து நதிநீர் நிறுத்தம்: கடும் தண்ணீர் பஞ்சத்தில் பாக்.,
03 Jun 2025லாகூர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு: அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்
03 Jun 2025சென்னை: ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அரசியல் பணியை விஜய் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது முப்படை தலைமை தளபதி பெருமிதம்
03 Jun 2025புனே:பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
-
மின் தடை நடந்த மையங்களில் நீட் மறுதேர்வு நடத்த முடியாது ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
03 Jun 2025சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்
-
நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
03 Jun 2025சென்னை: தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
-
முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த காவலர்: கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
03 Jun 2025சென்னை: முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழி நாள் என்று கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
-
தமிழ் போல் வாழ்க உன் புகழ்: கருணாநிதிக்கு கனிமொழி புகழாரம்
03 Jun 2025சென்னை: கருணாநிதி பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் போல் வாழ்க உன் புகழ் என்று கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் பாகிஸ்தான் ஒப்புதல்
03 Jun 2025புதுடில்லி: இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.
-
பிலாவல் பூட்டோ தலைமையில் உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பும் பாகிஸ்தான்
03 Jun 2025இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது.
-
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது ஒரேநாளில் 5 பேர் பலி
03 Jun 2025புதுடெல்லி: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
-
கமல்ஹாசன் என்ன மொழியியல் அறிஞரா? கர்நாடக உயர் நீதிமன்றம் காட்டம்
03 Jun 2025பெங்களூரு: கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா? என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
03 Jun 2025கடலூர்: வீரணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2025சென்னை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 27 பேர் பலி
03 Jun 2025காசா சிட்டி: காசாவில் தொடருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தங்கம் விலை உயர்வு
03 Jun 2025சென்னை: சென்னையில் நேற்று (ஜூன் 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,640க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jun 2025சென்னை: தமிழகத்தில் 2 நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
03 Jun 2025கராச்சி: நிலநடுக்க சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தானில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.
-
வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம் ஜூன் 6-ல் துவக்கம் மத்திய அரசு முடிவு
03 Jun 2025புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
-
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
03 Jun 2025சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
-
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
03 Jun 2025சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
-
வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் பலி
03 Jun 2025அசாம்: வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
03 Jun 2025புதுச்சேரி: “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
03 Jun 2025சிவகங்கை: சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாராளுமன்ற சிறப்புக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்டியா கூட்டணி கடிதம்
03 Jun 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இன்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு