முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளில் ' சீனா ' முதலிடம்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது. அங்கு 100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தோன்றினாலும் ஆரம்பத்திலேயே சீனா நோய் பரவலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் 3-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 140 கோடி மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு வரை 216 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள்.

 

100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதாவது நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேருக்கும் முழுமையாக (2 முறை) தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து