முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள்

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

தைபே : 949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் போது சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனாலும், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. 

மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவுக்கு சொந்தமான 6 ஜே-16 ரக போர் விமானங்கள், 2 ஜே-11 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை தங்கள் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் உடனடியாக போர் விமானங்களை அனுப்பி வைத்து சீன போர் விமானங்களை துரத்தியடித்ததாகவும் தைவான் அரசு தெரிவித்துள்ளது.

ராணுவத்திற்கு கூடுதலாக 9 பில்லியன் அமெரிக்க டாலரை செலவிட உள்ளதாக தைவான் அறிவித்த சில மணி நேரங்களில் தைவான் வான் எல்லைக்குள் சீனா நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து