எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 36-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிப் பெற்றது. மேலும், புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது.
டேவிட் மில்லர்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 36-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் உலகின் நெ.1 டி-20 பந்துவீச்சாளரான ஷம்சியும் டேவிட் மில்லரும் இடம்பெற்றனர். டெல்லி அணியில் ஸ்டாய்னிஸுக்குப் பதிலாக லலித் யாதவ் இடம்பெற்றார்.
டெல்லி அணி:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், லலித் யாதவ், ஏஆர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்ட்ஜே, அவேஷ் கான்
ராஜஸ்தான் அணி:
ஜெய்ஸ்வால், சாம்சன், லிவிங்ஸ்டன், மில்லர், லோம்ரர், பராக், தேவாதியா, கார்த்திக் தியாகி, சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷாம்சி.
டெல்லி பேட்டிங்...
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ப்ரித்வி ஷா மற்றும் சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தவான் - ப்ரிதிஷா...
8 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ராஜஸ்தான் வீரர் கார்த்திக் தியாகி பந்து வீச்சில் வெளியேறினார். ப்ரித்வி ஷா 10 ரன்கள் எடுத்த நிலையில் சேதன் சகரியா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி டெல்லி அணியின் ரன் வேகத்தை வெகுவாக உயர்த்தியது. நிதனாமாக ஆடிய ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஷ்ரேயாஸ் அதிரடி...
அதிரடியாக ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தெவாட்டியா பந்து வீச்சில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷெம்ரான் ஹிட்மயர் 28 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் ரஹ்மான் மற்றும் சகரியா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடக்கமே அதிர்ச்சி...
இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த டேவிட் மில்லரும் 7 ரன்களில் அவுட்டானார். இதனால் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே களத்தில் நிற்க பின் வந்த லோம்ரோர் மற்றும் ரியான் பராக் ஆகியோரும் விரைவில் அவுட்டானார்கள்.
சாம்சன் அபாரம்...
ஆனால் கேப்டன் சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா ஸ்டிர்க்குகளை அற்புதமாக ரொடேட் செய்தார். இதனால் சாம்சனுக்கு அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பவுண்டரிகளாக மாற்றினார். பின்பு அரை சதமடித்த அவர் எப்படியாவது ராஜஸ்தானை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என போராடிக்கொண்டிருந்த நேரத்தில் ராகுல் டெவாட்டியா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்பு பந்துக்கும் ரன்னுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தது.
சஞ்சு சாம்சன் மட்டுமே இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடிக்கொண்டிருக்கு 20 ஓவர் முடிவில் ராஜஸ்தானால் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சஞ்சு சாம்சன் 53 பந்துகளில் 70 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி.
மீண்டும் முதலிடம்...
இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தானை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணியின் பிளேஆப் சுற்று மேலும் பிரகாசமாகியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.