எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கப்பலில் இருந்து நிலப்பரப்புக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை நடைபெறவுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
முழுவதும் உள்நாட்டு தயாரிப்பிலேயே உருவாக்கப்பட்ட ஐ.டி.சி.எம். என்ற ஏவுகணை முதல் முறையாக நீண்ட தூரம் நிலப்பரப்புக்கு சென்று தாக்கக்கூடிய கப்பல் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) பல்வேறு ஏவுகணைகளை சோதனை நடத்தி உள்ளது. இந்தநிலையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு ஐ.டி.சி.எம். என்ற ஏவுகணையை உருவாக்கி உள்ளது. இது கப்பலில் இருந்து நீண்ட தூரம் நிலப்பரப்பை சென்று தாக்க கூடியது. முழுவதும் உள்நாட்டு தயாரிப்பிலேயே இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது. முதல் முறையாக நீண்ட தூரம் நிலப்பரப்புக்கு சென்று தாக்கக்கூடிய கப்பல் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள கடற்கரையில் நாளை அல்லது 8-ம் தேதி நடைபெறும் என்று டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அதிகாரி கூறும்போது, “திட்டமிட்டபடி புதன்கிழமை ஏவுகணை சோதனை நடத்தப்படும். வானிலையை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படலாம். இந்த ஏவுகணை 700 கி.மீ.-க்கு மேல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
கடந்த ஆகஸ்டு 11-ம் தேதியன்று ஐ.டி.சி.எம். ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. டர்போபாண் என்ஜின் சிறப்பாக செயல்பட்டாலும், கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஏவுகணை முழு வீச்சை கடக்கவில்லை. குறைபாடுகள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது முழு அளவிலான சோதனை நடத்தப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


