முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14-வது ஐ.பி.எல் கிரிக்கெட்: முதல் தகுதிச்சுற்றில் இன்று டெல்லி, சென்னை மோதல்

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன.

லீக் போட்டிகள்...

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்றுகள் நிறைவடைந்தது. லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

முதல் தகுதிச்சுற்று...

போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

வெளியேறுதல் சுற்று...

 

நாளை சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் 13-ம் தேதி மோதும். இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து