முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுமார் 15 ஆண்டுகளுக்குப்பின் திருச்சியை மிரட்டும் வெள்ளம் - நிரம்பிய கோரையாறு

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளதால், நகரின் மற்ற பகுதிகளிலிருந்து குடியிருப்பு வாசிகள் துண்டிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் திருச்சி வழியாக செல்லும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால், ஆறுகளை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருச்சியில் சராசரியாக 34 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இருப்பினும், கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், வயலூர் சாலை, குழுமணி சாலை, உறையூர் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தண்ணீர் தேங்கி நின்ற பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர விரும்பாமல் தங்களுடைய வீடுகளிலேயே தஞ்சம் புகுந்த சுமார் 4 ஆயிரம் குடியிருப்பு வாசிகளுக்கு கோ அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் உள்ள பொது சமையலறையில் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி குடமுருட்டி ஆற்றில் சுமார் 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் உறையூர், வயலூர் சாலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிரம்பி வழியும் கோரையாற்றில் பஞ்சப்பூர் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதேபோல், மணப்பாறை மற்றும் பொன்னனியாற்றில் இருந்து உபரி நீரை சேகரிக்கும் அரியாறு நிரம்பி வழிந்து புறநகரில் உள்ள தீரன் நகர் மற்றும் பிராட்டியூர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, கருமண்டபத்தில் உள்ள கொல்லங்குளம் குளத்து நீர், கோரையாற்றில் கலந்ததால் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும், வார்டு 60-ல் உள்ள செல்வம் நகர், லிங்கம் நகர், வின்ஸ் அன்பு அவென்யூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய குழுமணி சாலையில் வசிக்கும் மக்கள், திருச்சி மாநகராட்சியின் அவல நிலை குறித்து குற்றம் சாட்டுகின்றனர். வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளே வெள்ளத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. உபரி நீரை வெளியேற்ற, வாய்க்கால்களை தூர்வார தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து