முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அழகி உட்பட 17 பேருக்கு கொரோனா: உலக அழகி போட்டி ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 17 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலக அழகி போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உலக அழகி போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

உலக அழகி - 2021 இறுதிப் போட்டி  போர்ட்டோ ரிக்கோவில்  நடைபெற இருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த போட்டி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட பல போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இறுதிப் போட்டி மீண்டும் அடுத்த 90 நாட்களுக்குள், போர்ட்டோ ரிக்கோ கொலிசியம் ஜோஸ் மிகுவல் அக்ரெலோட்டில் திட்டமிடப்படும் என்று உலக அழகிப்போட்டி அமைப்பு தெரிவித்து உள்ளது. இறுதிப்போட்டியை ஒத்திவைக்கும் முடிவை அறிவித்துள்ள உலக அழகிப் போட்டி அமைப்பு, "போட்டியாளர்களிடையே அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கவனத்தில் வைத்து, உலக அழகிப் போட்டி அமைப்பு, உலக அழகி இறுதிப் போட்டியை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளது. 

நேற்று காலை கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டது” என்று தனது அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து