முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷ வாயு வெடித்து சிதறியதில் பாகிஸ்தானில் 14 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கராச்சி : பாகிஸ்தானில் வங்கி கட்டிடம் அடியில் இருந்த பாதாள சாக்கடையில் மீத்தேன் வாயு வெடித்து சிதறியதில் 14 பேர் பலியாகினர்.  10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் ஷேர்ஷா என்ற இடத்தில் வங்கி கட்டிடம் செயல்பட்டு வந்தது. பாதாள சாக்கடையின் மேல்புறத்தில் இந்த கட்டிடம் இருந்தது. நேற்று முன்தினம் காலை வங்கி வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்த போது, வங்கியின் அடிப் பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கட்டிடம் சரிந்து விழுந்தது. வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாதாள சாக்கடையின் மேல் வங்கி கட்டிடம் கட்டப்பட்டு இருந்ததால், சாக்கடையில் உருவான மீத்தேன் வாயு வெடித்து சிதறியதில் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கி கட்டிடத்தின் அடியில் எரிவாயு குழாய் எதுவும் பதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து