எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திட்டமிட்டு அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்கப் பார்க்கிறார்கள் என்று தி.மு.க. அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்க வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
1983-ம் ஆண்டைய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தி சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளனர். இதில் 5 ஆண்டு வரை ஆயுள் உள்ள கூட்டுறவு சங்கங்களை 3 ஆண்டாக குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் இதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் மூலம் தான் நடத்தப்பட்டு இருந்தது. இந்த சூழலில் சட்ட விரோதமாக இதன் பதவிக்காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக இந்த அரசு குறைத்துள்ளது. இது ஜனநாயக படுகொலை.
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்திருந்தால் தான் அந்த சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கூட்டுறவு சங்கங்கத்தில் உள்ள ஒரு குழுவே முறைகேடு செய்தால் அந்த சங்கத்தை மட்டும் கலைக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்த கூட்டுறவு சங்கங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்துள்ளனர். இது தி.மு.க. அரசு திட்டமிட்டு செய்யும் ஜனநாயக படுகொலை ஆகும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஐ.ஏ.எஸ். குழுவினர் தான் தேர்வு செய்து அதற்கான கமிட்டியில் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்துள்ளன. எனவே முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. அம்மா மினி கிளினிக் திட்டம், சிறப்பான திட்டம். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அம்மா மினி கிளினிக்கை தி.மு.க. அரசு மூடியுள்ளது. அம்மா உணவகமும், சிறப்பாக தான் செயல்படுகிறது. இந்த திட்டத்தை வெளிமாநிலங்களில் செயல்படுத்த பார்த்து செல்கிறார்கள். கொரோனா கால கட்டத்தில் தினமும் 7 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இந்த ஆட்சியிலும் அம்மா உணவகம் மூலம் தான் கொரோனா காலத்தில் உணவு வழங்கப்பட்டது.
ஆனால் அம்மா உணவகத்தை மூடினால் என்ன என்று துரைமுருகன் கேட்கிறார். இது வேதனை அளிப்பதாக உள்ளது. திட்டமிட்டு ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களை முடக்கப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க. கொண்டு வந்துள்ள திட்டங்களையும் முடக்கப் பார்க்கிறார்கள். ரேசனில் 21 வகை பொருட்களை பொங்கல் பரிசாக அரசு கொடுத்து வருவதாக கூறுகிறது. ஆனால் எல்லோருக்கும் 21 பொருட்கள் கிடைப்பதில்லை. 16 பொருட்கள் தான் கிடைக்கிறது. சில இடங்களில் இதை விடவும் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள். அப்படி வழங்கும் பொங்கல் பொருட்களும் தரமானதாக இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சி நடந்த போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையை திறந்து வைப்பதா? என்று மு.க.ஸ்டாலின் அவர் வீட்டு முன்பு பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினார். இப்போது கொரோனா வேகமாக பரவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார். அப்படி இருந்தும் டாஸ்மாக் கடைகள் மூடப்படாமல் உள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டையும், ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறு ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதுதான் தி.மு.க. ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்
-
காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
19 Oct 2025நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்
-
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
19 Oct 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.