முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் ரூ. 355.26 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில்  காணொலிக் காட்சி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் 104 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 66 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 45 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 365 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 40,095 பயனாளிகளுக்கு 209 கோடியே 76 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின்  வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ஈரோட்டிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர்கள் சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப. செல்வராஜ், கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், திருமகன் ஈவெரா,  சி.கே. சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார், ஈரோடு மாவட்ட கலெக்டர் எச். கிருஷ்ணனுண்ணி,  ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மதுபாலன், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து