முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் தடுப்பூசி முகாம் இல்லை : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரிகளுக்கு தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது தி.மு.க ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார் .

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், ''அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது. முன்களப் பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும். இந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி மெகா தடுப்பூசி முகாம் இல்லை. மெகா தடுப்பூசி முகாம் இல்லாவிட்டாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு எந்த தடையும் இல்லை.

மருத்துவக் கல்லூரிகளுக்கு தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது தி.மு.க ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து