முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 2.71 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி : ஒமைக்ரான் பாதிப்பும் 7,743 ஆக அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 2.71 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஒமைக்ரான் பாதிப்பும் 7,743 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய பாதிப்பு 2.68 லட்சமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 066 ஆக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 85 ஆயிரத்து 721-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்து 377-ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 106 பேரும், மே.வங்கத்தில் 36 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்தனர்.ஒட்டுமொத்த பாதிப்பில் கொரோனாவில் சிகிச்சையில் இருப்போர் 4.18 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 94.51 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தி்ல் கொரோனாவில் பாதிக்கப்பட்டு புதிதாக ஒருலட்சத்து 32 ஆயிரத்து 557 பேர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 16.28 சதவீதமாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 156 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,702 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டதால், ஒட்டுமொத்த பாதிப்பு 7,743 ஆக அதிகரி்த்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து