எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் திருச்செந்தூர் ஊள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்துவருவதால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு கூடுதலாக மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொங்கல் பண்டிகை நாட்களான 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
பொங்கல் மற்றும் தைப்பூச நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் செல்லும்போது கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற முடியாத நிலைமை ஏற்படும். இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் பொங்கல் விழா நாட்களில் கோயில்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து கோயில்கள், பேராலயங்கள், மசூதிகள் மூடப்பட்டிருந்தன.
இந்தநிலையில் 5 நாட்களுக்கு பின் நேற்று அதிகாலை அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் உற்சாகத்துடன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மெயின்கார்டு கேட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர் வலி தர்கா, நாகையில் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், தஞ்சை பெரியகோயில் திறக்கப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில், காட்டுப்பாவா பள்ளிவாசல் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், கரூர், பெரம்பலூர், காரைக்கால் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தைப்பூசத் தினமான நேற்று வராத பக்தர்கள் நேற்று திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 1 min ago |
ஆப்பிள் பான் கேக்5 days 1 hour ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 3 days ago |
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
-
சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன
18 Mar 2024சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் கருத்து
18 Mar 2024மும்பை : ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மும்பை அணயின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 19-03-2024.
19 Mar 2024 -
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
19 Mar 2024மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
டெல்லியில் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
19 Mar 2024புது டெல்லி, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.
-
தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகம் புதுவையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந
-
10 ஆண்டு காலமாக மாநில உரிமைகளை பறித்த மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை விரட்டிடுவோம்: முதல்வர் ஸ்டாலின்
19 Mar 2024சென்னை : 10 ஆண்டு காலமாக மாநில உரிமைகளை பறித்த மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை விரட்டிடுவோம் என்று முதல்வர் மு.க.
-
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப். 6-ம் தேதி வரை நீட்டிப்பு
19 Mar 2024புது டெல்லி, மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
19 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி இங்கிலாந்து தூதரகம் அறிக்கை
19 Mar 2024லண்டன், மன்னர் சார்லஸ் இறந்ததா வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு
19 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
-
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி அறிவிப்பு
19 Mar 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.
-
ஜார்கண்ட் முன்னாள் முதல்வரின் உறவினர் பா.ஜ.க.வில் இணைந்தார்
19 Mar 2024ராஞ்சி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன் டெல்லியில் உள்ள பா.ஜ.க.
-
இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை 85 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க வீடு, வீடாக படிவம் வழங்கப்படும்: சாகு
19 Mar 2024சென்னை : இன்று 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 ட
-
ரபா மீது தாக்குதல் நடத்த திட்டம்: நெதன்யாகுவிடம் கவலை தெரிவித்த அதிபர் பைடன்
19 Mar 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோபைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.