முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி குற்றவாளிதான்: யூடியூப்புக்கு ஏன் தடை விதிக்க கூடாது? மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி கேள்வி

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்று ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ள நிலையில், யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

யூடியூப்பில் தவறான பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீதிபதி புகழேந்தி பேசியதாவது.,

யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான். தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது?

யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பதிவுகளை தடை செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? இது குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து