எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
சென்னை வால்டாக்ஸ் சாலை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ. வேலு நேற்று ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சென்னை மாநகராட்சியில் முக்கியமான சாலைகளில் ஒன்று இந்த வால்டாக்ஸ் சாலையாகும். இவ்வாண்டு பெய்த பெரும் மழையினால் முழங்கால் அளவிற்கு மழைநீர் ஓடியது. அப்போது முதல்வர் ஆய்வு செய்த போது, மழைநீர் வடிவதற்கு போதுமான வடிகால் வசதி இல்லை என்பதை அறிந்து ஆணையிட்டதின் அடிப்படையில் நானும், அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் ஆகியோர் ஏற்கனவே, இப்பகுதியினை பார்வையிட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்து முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, இந்த பகுதிகளில் மட்டும் 8 கல்வெட்டு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 4600 மீட்டர் நீர்வழி போக்குகளை சரிசெய்கின்ற பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஈடுப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஜுன் மாதத்திற்குள் நிறைவடையும். ரூ.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.”
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்த வழிவகை செய்யப்படும். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பாடாத வண்ணம் புதியதாக 110 கி.வாட் மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சென்னை மாநகர எல்லையில் 258கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 14.5கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 30.71 கி.மீ. நீளமுள்ள வடிகால் பணிகள் மற்றும் 34 சிறு பாலங்கள் இந்த வருடத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. இந்த மேற்கண்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.263 கோடி ஆகும். இப்பணிகளில் 14.5 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் 30.3.2022-க்குள் முடிக்கப்படும். 13.5 கி.மீ. நீளமுள்ள வடிகால் மற்றும் 18 சிறுபாலப்பணிகள் 30.6.2022-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் 30.9.2022- க்குள் பணிகள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மழைநீரினால் தண்ணீர் தேங்காமல் இருக்க மின்சாரம் வாரியம், மாநகராட்சி, ரயில்வே, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய அலுவலர்களை கொண்டு வடிகால் பணிகளை துரிதப்படுத்த மேற்கண்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, சென்னை சட்டக்கல்லூரி விடுதி வளாகப் பின்புறத்தில் காலியாகவுள்ள இடத்தினை பார்வையிட்டு, அந்த இடத்தில் சாலையோரத்தில் வசிக்கும் பொது மக்களுக்காக புதிய குடியிருப்பு கட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. டேவிட்சன் சாலையில் உள்ள சவுக்கார்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதை பார்வையிட்ட பிறகு, அக்கட்டிடங்களை உடனே இடித்து விட்டு, பதிவுத்துறை அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் பிற துறைகளுக்கு கட்டிடம் கட்ட மதிப்பீடு தயார் செய்து வழங்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...