முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 3-வது ஒருநாள் போட்டி: தொடரை முழுமையாக வெல்வோம்: தென் ஆப்ரிக்கா கேப்டன் நம்பிக்கை

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே இன்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக வெல்வோம் என தென் ஆப்ரிக்கா கேப்டன் பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆட்டநாயகன் ...

தென்ஆப்ரிக்கா-இந்தியா இடையே 2வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 66 பந்தில் 78 ரன் விளாசிய டிகாக் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

மதிப்புமிக்க வீரர்...

முதல் போட்டியிலும் வெற்றிபெற்ற அந்த அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. வெற்றிக்கு பின் தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், தொடரை வெல்ல விரும்பினோம். ஆனால் 2வது போட்டியிலேயே நடந்ததை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. டிகாக் ஏன் எங்களுக்கு இவ்வளவு மதிப்புமிக்க வீரர் என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார். 

முயற்சிக்கிறேன்... 

நான் என்னைப் பற்றி மறந்துவிட்டு, அணியில் உள்ள மற்ற தோழர்களை எவ்வாறு ஊக்கப்படுத்த முடியும் என்பதைப் பார்க்க முயற்சிக்கிறேன். 2-1 ஐ விட 3-0 மிகவும் நன்றாக இருக்கிறது. 2-1 ஐ விட 3-0 மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து