எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே டி20 கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி கூறினார். ஆனால் தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி கூறினார். .
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார். இந்நிலையில் விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்பவிருந்ததாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் கேப்டன் பதவி குறித்த கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாழ்த்திய மும்பை அணி
ஐ.பி.எல். 2022 சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஒவ்வொரு அணிகளும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்களை வெளியேற்றி பொது ஏலம் மூலம் எடுக்க வேண்டும். அதன்படி நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்காக அந்த அணி 15 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஒரே குடும்பமாக விளையாடி வந்தார்கள். தற்போது அந்த குடும்பத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். இருந்தாலும், ‘குட் லக்’ என மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், உங்களை மறுபக்கத்தில் சந்திப்போம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்திய அணியில் மாற்றம் செய்ய வேண்டும் - காம்பீர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசி ஒருநாள் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் காம்பீர் கூறியதாவது:-
பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய வீரர் ரிஷப் புகழாரம்
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்திருப்பதாவது., கடந்த போட்டியில் நாங்கள் சேஸ் செய்தோம், இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம், எனவே அவர்கள் பேட்டிங் செய்யும் போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது.
அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்தார்கள் அதனால்தான் அவர்கள் இலக்கைத் துரத்தினார்கள். மிடில் ஓவர்களில் எங்களுக்கு போதுமான விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர்கள் (தென்ஆப்பிரிக்க ஸ்பின்னர்கள்) சீரான முறையில் பந்து வீசினார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடுவதற்குப் பழகிவிட்டனர் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் பிரிவினை: பாக். வீரர் டேனிஷ் கனேரியா
இந்திய கிரிக்கெட் அணி டிரஸ்ஸிங் ரூமில் இரண்டு குழுக்களாக பிரிந்திருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா. இந்த குற்றச்சாட்டை விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து முன்வைத்துள்ளார் அவர். இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது அணி இரண்டாக பிளவுப்பட்டு இருப்பதாக ஊகங்களின் அடிப்படையில் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிப்பது உண்டு. அந்த வகையில் டேனிஷ் கனேரியாவும் இதனை சொல்லியுள்ளார்.
“இந்திய அணி இரண்டாக பிரிந்திருப்பதை போல தெரிகிறது. அது கோலி மற்றும் ராகுலாக இருக்கலாம். ஆனால் இதனை கோலி விரும்பமாட்டார். ஏனெனில் அவர் அணியாக இணைந்து விளையாடவே அதிகம் விரும்புபவர். அதனால் நிச்சயம் வலுவாக கம்பேக் கொடுப்பார். டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்போடு களம் இறங்கியது. ஆனால் கேப்டன் ராகுலிடம் ஸ்பார்க் இல்லை. தென்னாப்பிரிக்க அணியின் பார்ட்னர்ஷிப்பை தனது பவுலர்களை வைத்து அவரால் தகர்க்க முடியவில்லை” என தனது யூடியூப் சேனலில் சொல்லி உள்ளார் அவர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி படைத்த மோசமான சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ஆர்வலர்கள் கடந்த 2019 முதலே எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ‘ரன்-மெஷின்’ என அழைக்கப்படும் கோலியால் ஏனோ அதை செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார் அவர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ‘டக்’ அவுட்டானதால் அது நடந்துள்ளது. இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்களில் 14 முறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் இணைந்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக், ரெய்னா மற்றும் ஜாகீர் கான் 14 முறை டக் அவுட்டாகி உள்ளனர். இந்திய அணிக்காக விளையாட ஒருநாள் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களில் பட்டியலில் ஹர்பஜன் சிங் (17), கங்குலி (16) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் 13 முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட்டாகி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.