முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

அரியலூர் மாவட்டம் சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து  நன்செய் மற்றும் புன்செய் ஆயக்கட்டு நிலங்களுக்கு 111.3 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 28.01.2022 முதல் 21.03.2022 வரை முறை வைத்து 52 தினங்களுக்கு  தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டத்திலுள்ள  5080.62  ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து