முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கட்சிகளை செயலிழக்க வைப்பதற்காக செயல்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்: ஜெயக்குமாரை சந்தித்த பின் ஓ.பி.எஸ். பேட்டி

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

தங்களை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து பேசினார். மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்டுப்பாட்டில் இருக்கின்ற காவல்துறையும் இன்று பல்வேறு வகையான, உண்மைக்கு மாறான பொய்யான வழக்குகளை, அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.

எதிர்கட்சியை அழித்துவிட தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. தங்களை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

மேலும், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தி.மு.க. அரசு அச்சுறுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களை தி.மு.க.வில் சேரும்படி காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து