முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள்: 4 மாநில வெற்றி குறித்து குஷ்பு கருத்து

வியாழக்கிழமை, 10 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை பெற்றுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுகிறது. இது குறித்து நடிகை குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மக்கள் பா.ஜ.க. உடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டுகின்றன. கட்சி மீதும் நமது பிரதமர் நரேந்திர மோடி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எதுவும் தடுக்க முடியாது.  இந்திய தேசிய காங்கிரஸ் மேலும் சிதைந்து விட்டது. மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். பா.ஜ.க.வில் உள்ள நாங்கள் செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். 

வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி, ஒவ்வொருவரும்  கடுமையாக உழைத்தனர். கடுமையாக உழைத்த அனைத்து தன்னார்வலர்களும், செய்தி, சித்தாந்தம், ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நரேந்திர மோடி ஜி, நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்காது. இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து