முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 2 சதவீதம் அதிகரிப்பு: 2022-ல் விமான எரிபொருளின் விலை 7-வது முறை உயர்ந்தது

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2022      இந்தியா
Airport 2022 04 01

Source: provided

புதுடெல்லி : விமான எரிபொருள் விலை நேற்று 2% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து 7வது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காணாத விலை உயர்வாகவும் இது அமைந்துள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் காரணமாக, விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில், ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது ரூ.112.92 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூ.76.1 காசுகளாக இருந்த நிலையில், மார்ச் மாதம் லிட்டருக்கு ரூ.110.7 காசுகளாக அதிகரித்தது. அது நேற்று ரூ.112.92 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விமான எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். 

எரிபொருள் விலை உயர்வு விமானப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தை பாதிக்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணத்தில் 40 சதவிகிதம் விமான எரிபொருளுக்காக வசூலிக்கப்படுகிறது. இதனால் விமான எரிபொருளின் விலை விமானப்போக்குவரத்தின் வருவாயை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து