LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : மதுரையை அடுத்த அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை திருவிழா நேற்று முன்தினம் 14-ம் தேதி தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடானார். முன்னதாக வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று உபசரிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் வந்தடையும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றியபடி கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் வந்தடைகிறார். அதை தொடர்ந்து இன்று 16-ம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர் கோரிப்பாளையம் வழியாக மதுரை வைகை ஆற்றை அடைகிறார்.
இன்று அதிகாலை காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை தரிசிப்பர்.
அதை தொடர்ந்து நாளை 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஷேச, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 18-ம் தேதி (திங்கட்கிழமை) மோகன வதாரத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்று இரவு பூப்பல்லக்கு அலங்காரமும் நடைபெறுகிறது.
வரும் 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)பூப்பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், 20-ம் தேதி (புதன்கிழமை) அப்பன் திருப்பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பின்னர் பகல் 1.30 மணியளவில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர்மலை வந்து சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வைகை அணையில் இருந்து முதல்கட்டமாக கடந்த 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இது அடுத்த சில நாட்களில் மதுரை வைகை ஆற்றுக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் இருந்து மதுரை வைகை ஆற்றுக்கு இது வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
மதுரை வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடக்கும் சமயத்தில் நீர் வரத்து அதிகரித்திருப்பது திகைப்பை ஏற் படுத்தி உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் கூறுகையில், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 26 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 23 hours ago |
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
குறைந்த காற்றின் வேகம் குறைந்தது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
17 Aug 2022சென்னை : குறைந்த காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
17 Aug 2022டெல்லி : உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
-
காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம்: நாக் கமிட்டி
17 Aug 2022கோவை : காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.
-
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் : விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
17 Aug 2022புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
-
3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை
17 Aug 2022ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானை சிக்கியது
17 Aug 2022கோவை : தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
-
கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
17 Aug 2022மும்பை : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்
17 Aug 2022சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை அழைப்பை ஏற்க இ.பி.எஸ். மறுப்பு
18 Aug 2022சென்னை: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.